Wednesday, April 24, 2013

என் மனைவி எனக்கெழுதிய கவிதை - 02



நான் பேசுகிறேன்
நீ பேசுகிறாய்
நான் பேசுகிறேன்
நீ வேலை செய்கிறாய்
நான் பேசுகிறேன்
நீ கேட்கிறாய்
நான் பேசுகிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்

நான் மௌனமாயிருக்கிறேன்
நீ பேசத்தொடங்கினாய்
நான் மௌனமாயிருக்கிறேன் 
நீ பேசுகிறாய்
நான் மௌனமாயிருக்கிறேன்
நீ கேள்வி கேட்கிறாய்
நான் மௌனமாயிருக்கிறேன்
நீ பேச சொல்கிறாய்

நான் என்ன செய்ய?
என் பேச்சால் கொல்லவா?
இல்லை மௌனத்தால் கொல்லவா?

1 கமெண்ட்ஸ்:

கவியாழி said...

அருமை

Post a Comment